பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“உலகத்திலேயே
நான்தான் பெரிய கொள்ளைக்காரன்” என்கிறேன்.

“நீங்களா?” என்று கேட்டு வியக்கிறாய்.

“ஆமாம்.
உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள
அழகுச் செல்வத்தையெல்லாம்
நான்தானே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறேன்.

பாவம்,
நீ இவ்வளவு அழகைப் பெற்றிருந்தும் அனுபவிக்க முடியவில்லையே!
செல்வத்தைச் சேர்ப்பவர் ஒருவர்;
துய்ப்பவர் ஒருவர்.
உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்” என்கிறேன்.

“நீ சிரித்துக்கொண்டே
பாவம், நீங்கள் ஏமாந்து போய்விட்டீர்கள்; நான் வெறும் அழகைக் கொடுத்துவிட்டு உங்கள் அழியா அன்பு முழுவதையும் கொள்ளையடித்து விட்டேனே.”
என்கிறாய்.

நீ மிகமிகப் பொல்லாதவள்.

64

 

91