பக்கம்:கனவுப்பாலம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 38 கனவுப் பாலம் இனிஷியலாயிருந்தாலும் அந்தக் கைக்குட்டை அவளு "-"து. கானு என்பது நிச்சயமாய்த் தெரியவில்லை. ஆராய்ந்து அறிய வேண்டும் என்ருர்கள். 'இதற்காகத்தான் உங்களை அனுப்பினேன? பழைய சங்கதிகளேயே சொல்கிறீர்களே??’ என்று சற்று கடுமை யாகவே பேசி விட்டார் ஆசிரியர். கெளதம் ரோஷப்பட்டுக் கொண்டு இந்த வேலையை ராஜினாமாச் செய்து விடலாமா?’ என்ற அளவுக்கு வந்து விட்டான். ஒரு வாரம் லிவு போட்டு விட்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டான். - இதைக் காட்டிலும் உங்களுக்கு வேறு நல்ல வேலை கிடைத்து விடாது. நீங்கள் முன் னுக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமே உங்கள் ரோஷபுத்திதான். அடிக்கடி வேலயை விட்டு விட்டு வந்து விடுவதுதான். நாளேயிலிருந்து ஒழுங்காக ஆபீஸ்-க்குப் போங்கள்’ என்று விரட்டி அனுப்பினுள் அவன் மனேவி. லீவு முடிந்து ஆபீஸுக்குப் போன போதுதான் இப்படி ஒரு விைேதமான அழைப்பு. х சனிக்கிழமை ஆகஸ்ட் முதல் தேதி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியரிடம் கூட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லே. போய்ப் பார்த்து விடுவதென்று தீர்மானித்தான். டாக்ஸியைக் கூப்பிட்டு ஏறிக் கொண்டான். டோடோ கடற்கரை ஓட்டலுக்குப் போய் மறுநாள் திரும்பி வர மொத்தமாக வாடகை பேசிக் கொண்டான். ... ." ஏர்கிண்டிஷன் டாக்ளி ಆ6ುಗಿ, ஞாயிறு ஆனதால் வழியெல்லாம் ஏராளமான கார்கள். கடற்கரை ஒரமாகவே ரோடு. இந்தப் பக்கம் பசுமையான மல்கள். அந்தப் பக்கம் நீலக் கடல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/34&oldid=768627" இலிருந்து மீள்விக்கப்பட்டது