பக்கம்:கனிச்சாறு 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  59

பிறந்தநம் மண்ணில்
பீடுறும் தமிழில்
பேசுதற் கோ, ஒரு தடை?
மறந்த, பண் பாட்டை
மறவர்கள் மீட்க
மறிப்பவர் எவர்?கொடி றுடை!

முத்தமிழ்த் தரையில்
முதுதமிழ் மொழியில்
முறைப்படப் பயில்வதா தீது?
எத்துறை அறிவையும்
ஏற்குநந் தமிழே!
இனியுங்கள் பருப்பு,வே காது!

அத்தனை, பாட்டனை
அடிமைசெய் ததுபோல்
ஆரையிங் கரற்றுவாய் இன்னும்?
எத்தனை ஆண்டுகள்
இழப்பதெம் உரிமை?
எழுந்திடின் கழுகுமைத் தின்னும்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/86&oldid=1513005" இலிருந்து மீள்விக்கப்பட்டது