பக்கம்:கனிச்சாறு 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮

கனிச்சாறு இரண்டாம் தொகுதி


12. எங்கும் எதிலும் தமிழே வேண்டும் என்பது.

13. தமிழரைத் துயிலெழுப்பும் அழகிய பத்துப் பாடல்கள் இவை.

14. ஆரங்கே? அற்றைத் தமிழ் மகனா நீ என்று கேட்டுப் பழம்பெருமைகளைநினைவூட்டுவது.

15. ‘தமிழர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உரிமையாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அக்காலத்தில் கடலே நீ அவர்களையும் அவர்கள் நிலத்தையும் விழுங்கினாய்; இன்றைக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கின்ற இந்நிலையில் எழுந்து சீறி இந்நிலத்தை விழுங்கி உனக்குக் கழுவாயைத் தேடிக்கொள்’ என்று பாவலரேறு கடலிடம் வேண்டுகிறார்.

16. தமிழ் மொழியைத் தவிர்த்து இந்தி படிப்பது கனியை விட்டுவிட்டுக் கல்லைக் கடிப்பதுபோலும் செய்கை என்று கடிவது.

17. குனிந்து வாழும் தமிழரைப் பற்றிய இரக்கம்.

18. தமிழர்கள் இனங்கொல்லிகள் என்று ஏசுகிறது இது.

19. தமிழர் யார்? விளக்கம் இதில்.

20. இன்றைய தமிழகத்தின் தெளிவான படப்பிடிப்பு இது.

21. நினைவுகள் அழுந்தும் துயரச் சுழற்சிகள் இவை.

22. தமிழுரிமை காத்தற்குத் தமிழரை ஆர்த்து எழுங்கள் என்றது. 1965 மொழிப்போருக்கு வித்திட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

23. இந்திப் போராட்டத்தில் ஈடுபட விரும்பாத கோழையர்கள் விலகி நில்லுங்கள் என்பது.

24. தமிழர் விழிப்புற வேண்டும் என்பது.

25. அயர்வுற்ற நெஞ்சை அயர்வு நீக்கக் கூறுகின்ற அருமையான பத்துப் பாடல்கள். படித்துச் சுவைத்துப் பின்பற்றக் கூடியவை.

26. தில்லியாட்சியினருக்கு விட்ட குரங்குத் தூது.

27. தமிழ்மொழி தாழ்ந்தது என்றுரைக்கும் தருக்கரிடம் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது.

28. தமிழர்கள் தங்களுக்குள் ஒன்றாக இணையவில்லையாயின், தமிழ்மொழி தாழ்ந்து. இழிந்து போய்விடும், இந்தி படிக்க வேண்டியிருக்கும், இனமும் வீழ்ச்சியுறும் என எச்சரித்துக் கூறிய பாடல் இது.

29. தமிழனை நினைந்து விடுத்த கண்ணீர் வரிகள் இவை. “தமிழா! மிகப்பழமையான காலத்திலிருந்து உன் தமிழ்மொழியை ஆவியெனக் காத்து வந்தனையே, அவ்வாறு காத்ததெல்லாம், இந்தி யென்னும் புலைமொழிக்கு ஏவல் செய்யும் இழிதகைக்கோ” என்பது போல் வினாவகையில் கேட்ட உருக்கமான பதினைந்து பாடல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/19&oldid=1520908" இலிருந்து மீள்விக்கப்பட்டது