பக்கம்:கனிச்சாறு 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 169


109

வேதியர் கொள்கையை வேரறுக்கும் முறை!


இந்தத் தலைமுறையில்
ஏதோ ஒருவழியில்
முந்தைத் தமிழினத்தை
முன்னேற்ற வேண்டும், நாம்
சொந்தத் திருமொழியும்
தொன்மைப் பெருநாடும்
சிந்துப் பகைவரினால்
சீரழியும் என்பதனால்!

மோதல் தமிழினத்துள்
முற்றும் தவிர்த்திடுக!
காதல் தமிழ்மொழிமேல்
கற்றவர்கள் கொண்டிடுக!
சாதி யொழிப்பும்
தூய தமிழ் வழக்கும்
வேதியர் கொள்கையினை
வேரறுக்கும் என்பதனால்!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/205&oldid=1437579" இலிருந்து மீள்விக்கப்பட்டது