இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 187
ஆழ்வா ராகி அரற்றிட வேண்டாம்.
வீழ்வாரை வீழாது காத்திடல் வேண்டாம்!
இத்தனைக் காலமாய் இடர்பல பட்டுச்
செத்த தமிழினம் சிந்திக்கத் தொடங்கிப்
பெரியார் என்னும் பெருமகன் தம்மால்
உரிய உரிமைகள் பெற்று, இனி உய்ந்திடும்
70
அரிய முயற்சியை, அமைச்சதி காரத்தால்
நெரியச் செய்திடல் வேண்டாம்! ஆரிய
நச்சர வத்தை நல்லபால் ஊற்றி
மெச்சி வளர்த்து, மீளவும் நம்மேல்
உசுப்பி விடுதற்கு உழைத்திட வேண்டாம்!
பசப்புரை கூறிப் பதவியைக் காத்தற்குப்
பார்ப்பனர் பாதம் பற்றிட வேண்டாம்!
போர்ப்பண் முழக்கிது! புறக்கணிக் காமல்
வீரப்பன் வாயடங்க வேண்டும், இனியேனும்
சீரப்பன் ஆகித் திகழ்ந்து சிறக்கவே!
80
-1982