பக்கம்:கனிச்சாறு 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


132

வெற்றிக்குப் பல கோணம் உண்டு!


நல்லறிவு செயலாக
மலரும் போது
நாட்டிலுள்ள தீமையெலாம்
ஒன்று சேர்ந்து,
வெல்லுதற்கு நினைத்தாலும்
வெற்றி இல்லை!
வேளாண்மை எப்பொழுதும்
பொய்ப்ப தில்லை!
வல்லதொரு கொள்கையினை
வகுத்துக் கொண்டால்,
வரும்சூழ்ச்சி பலவெனினும்
வெற்றி யுண்டாம்!
வெல்லுவதும் தோற்பதுவும்
வீரர்க் கொன்றே!
வெற்றிக்குப் பலகோணம்
உண்டாம் கண்டீர்!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/238&oldid=1437439" இலிருந்து மீள்விக்கப்பட்டது