218 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
147
தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்!
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும்,
தமிழினத்தின் எழுச்சிக்கும்
தமிழ்நிலத்தின் விடுத லைக்கும்,
குமிழ்க்காத வெறுநெஞ்சும் -
கூறாத தோல்வாயும் -
குதித்தெழா மரத்தின் காலும்
சிமிழ்க்காத புண்கண்ணும், -
செய்யாத கூன்கையும்
சினக்காத வெற்று ணர்வும் -
இமிழ்கின்ற கடல் நிலத்துள் -
எங்கோவோர் வெற்றிடத்தில்
எவ்வுருவோ டிருக்கு மாயின்,
அவ்வுருவைத் தமிழுருவாய் -
அவ்வுடலைத் தமிழுடலாய் -
அவ்வுயிரைத் தமிழி னுயிராய் -
எவ்வகையும் கொள்ளாதீர்;
எம்மதிப்பும் கொடுக்காதீர்;
எவ்வழியும் இணைசெய் யாதீர்!
ஒவ்வாதீர் அதன்பேச்சை;
உரையாதீர் அதனிடத்தில்;
உறையாதீர் அதனோ டென்றும்!
செவ்வகையிற் பிறந்திருக்கும்
செம்பிறவி என்றதனைச்
சிறிதேனும் போற்றி டாதீர்!
தசைத்திரளை யாய்மதிப்பீர்!
தான்தோன்றி யாய்நினைப்பீர்!
தமிழினத்தில் தவறித் தோன்றி
வசைக்குரிய இழிவுருவாய்
வாய், மூக்கு, கண், காது
வைத்தவெறுஞ் சடலம் என்றே,
இசைத்தெண்ணி அதைத்தவிர்ப்பீர்!
எச்செல்வம் எவ்வறிவோ