பக்கம்:கனிச்சாறு 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  219

டிருந்திடினும் இகழ்ந்து செல்வீர்!
திசைத்துலவும் இவ்வகையில்
தமிழரென்று பலபிறவி
திரிதருமால் தேர்ந்து கொள்வீர்!

-1989


148

வீரராய் நிமிர்ந்து இனப்பணி
ஆற்றுவீர்!


ஏளனப் படுத்துவர்;
இகழுவர்; புண்பட
இழிவுரை பற்பல கூறுவர்!
கேளெனப் படுத்தவர்
கிளைபல மாறுவர்;
கீழ்மைப் பழிகளைச் சுமத்துவர்!
வாளெனக் குடைகுவர்;
வருக வருகென
வரும் பகைக்(கு) அடைத்ததாழ் திறக்குவர்!
தேளெனக் கொட்டுவர்!
திகைப்பிலா(து) இனப்பணி
செய்(து) அருங் கடமையை ஆற்றுவீர்!

கொஞ்சமும் அன்பிலாக்
கொடுமையின் வெதுப்பொடு
கொள்கையைப் புதுவதாய் அலசுவர்!
வஞ்சமும் இரண்டக
வன்மையும் கொண்டராய்
வதைபடப் பழமையும் கிளறுவர்!
நெஞ்சமும் கொதித்திட
நீர்மையும் புகைந்திட
நெருக்கடி பற்பல புகுத்துவர்!
வீரராய் நிமிர்ந்ததை
நிகழ்த்துவீர்! அவை புறந் தள்ளுவீர்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/255&oldid=1437465" இலிருந்து மீள்விக்கப்பட்டது