பக்கம்:கனிச்சாறு 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  3



1

போர்ப் பாட்டு!

முரசே முழங்குக! முரசே முழங்குக;
முரசே முழங்குக, நீ!
அரசே செந்தமிழ் அரசே வாழ்கென,
முரசே முழங்குக, நீ! 1

சங்கே ஊதுக! சங்கே ஊதுக!
சங்கே ஊதுக, நீ!
எங்கோ மூவர் ஏற்றிய தமிழெனச்
சங்கே ஊதுக, நீ! 2

பம்பை பம்புக! பம்பை பம்புக!
பம்பை பம்புக, நீ!
எம்பைந் தமிழர சோச்சுக என்றே
பம்பை பம்புக, நீ! 3

கொம்பே அலறுக! கொம்பே அலறுக!
கொம்பே அலறுக, நீ!
எம்பேரிசைத் தமிழ் எங்கணும் முழங்கிடக்
கொம்பே அலறுக, நீ! 4

கரடிகை உறுமுக! கரடிகை உறுமுக!
கரடிகை உறுமுக, நீ!
நெருடர் நுழைக்கும் வடமொழி விரட்டிடக்
கரடிகை உறுமுக, நீ! 5

முழவே முரலுக! முழவே முரலுக!
முழவே முரலுக, நீ!
கழலணி மறவர்கள் விறல்பெற நடந்திட
முழவே முரலுக, நீ! 6

பறையே பிறங்குக! பறையே பிறங்குக!
பறையே பிறங்குக, நீ!
பொறையே கொண்டவர் பொங்கிடில் தீதெனப்
பறையே பிறங்குக, நீ! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/39&oldid=1523571" இலிருந்து மீள்விக்கப்பட்டது