இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 13
9 நாடு மறப்பரோ ?
மூன்று கடல்களின் நடுவி னில் உயர்
முத்த மிழ்த் தனி நாட்டினில்
ஊன்று நிலவளம் மலைவ ளஞ்சுரந்
தூறும் ஆறுகள் பாய்வளம்
ஆன்ற கனிவளம் கான்வ ளம் இவை
ஆக்கங் காட்டிடும் வளிவளம்
தோன்று சிறப்பினை நினைக்கை யில்தமிழ்த்
தூய்மை நெஞ்சம் உவக்குமே!
இல்லை யென்றுளஞ் சோர்ந்த வர்,நாட்
டுயவர்வெ ணாமற் கழிப்பவர்,
சொல்லில் வீண்பொழு திறைப்ப வர்நலஞ்
சூம்பி வாழ்ந்திடு மேழையர்
கல்லை ஒளிவிடு பொன்னெ னச்செயுங்
கதைய டிப்பவர் யாவரும்
ஒல்லை உழைத்திடில் உயர்வ ரேநாடு
உய்ய நினைப்பர் மறப்பரோ?
-1955(?)