இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
18 இனங்கொல்லி!
எந்தமிழ்க்குப் பிறராலே வருந்தீங்கும்
இடர்ப்பாடும் எள்மூக் கென்றால்,
செந்தமிழர் எனக்கூறிச் செருக்கிடுவார்
செயுந்தீங்கு பறங்கிக் காயாம்!
வெந்தழலில் வெந்ததுவும் நீர்வந்து
விழுங்கியதும் போக, எஞ்சும்
செந்தமிழ் நூற் பெருமையெல்லாம் இவர் விழுங்கிச்
செரிக்கின்றார்! இனங்கொல்வாரே!
-1959
19 எவரோ அவர் தமிழர்!
காடு புகுந்தவ ராயினும் பண்டைக் கவின்மறந்திந்
நாடு கடந்தவ ராயினும் இப்பெரு நானிலத்துள்
ஓடி யுறைபவ ராயினும் உண்மைத் தமிழ்க்குருதி
ஓடுவ தென்றே யுரைப்பார் எவரோ அவர்தமிழர்!
-1959