பக்கம்:கனிச்சாறு 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


18  இனங்கொல்லி!

எந்தமிழ்க்குப் பிறராலே வருந்தீங்கும்
இடர்ப்பாடும் எள்மூக் கென்றால்,
செந்தமிழர் எனக்கூறிச் செருக்கிடுவார்
செயுந்தீங்கு பறங்கிக் காயாம்!
வெந்தழலில் வெந்ததுவும் நீர்வந்து
விழுங்கியதும் போக, எஞ்சும்
செந்தமிழ் நூற் பெருமையெல்லாம் இவர் விழுங்கிச்
செரிக்கின்றார்! இனங்கொல்வாரே!

-1959


19  எவரோ அவர் தமிழர்!

காடு புகுந்தவ ராயினும் பண்டைக் கவின்மறந்திந்
நாடு கடந்தவ ராயினும் இப்பெரு நானிலத்துள்
ஓடி யுறைபவ ராயினும் உண்மைத் தமிழ்க்குருதி
ஓடுவ தென்றே யுரைப்பார் எவரோ அவர்தமிழர்!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/64&oldid=1424661" இலிருந்து மீள்விக்கப்பட்டது