இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
32 பகையே விலகுக!
ஆர்த்த முரசொடு கொம்பும் முழங்க
அருந்தமிழர்
சீர்த்தி விளங்க நெடுங்கொடி தூக்கிச்
செறுவிழிவேல்
கூர்த்த மறவர் களிற்றொடும் போந்தார்!
குலைநடுங்கிப்,
போர்த்த இருளே, பகையே, விலகுக
பொக்கெனவே!
-1963
33 அடிமைக் கூட்டம்!
நாயடிமை செய்பவராய்த் தமிழரெல்லாம்
நலிகையிலே, அமைச்ச ரெல்லாம்
போயடிமை செய்கின்றார் வடவர்க்கே;
அவர் வாய்ச்சொல் தலைமேற் கொண்டே!
வாயடிமை கொண்ட தமிழ்த் தலைவரெல்லாம்
முழங்கிடுவார்; வளர்ச்சி காணார்!
தாயடிமை யுறக்கண்டும் அவள்மானம்
விலைபோக்கும் தகைமை யோரே!
-1964