பக்கம்:கனிச்சாறு 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 59


58  தமிழ் நிலம் மீட்போம்!


அடிமை விலங்கொ டித்து,
மடிமை, மடம்வி லக்கிக்
குடிமை நலம்வி ளைக்க வருவீர்; செயல் தருவீர்! - இன
விடிவை நினைத்து டம்பில்
குடிவைத் திருக்கும் உயிர்
முடிவைப் பெறுதற் குள்,ஓர் கை பார்ப்போம்; நிலம் மீட்போம்!

-1986


59  உரிமை பெற விரும்பாத உளமென்ன உளமோ?

அனைவருமே திரண்டெழுந்தால்
அரசாட்சி என்செய்யும்?
முனைவோர்க்குக் கடலாழம்
முழங்காலென் றறியோமோ?

பழகுதமிழ் இந்தியினால்
பாழடையக் கண்டிருந்தும்,
உழுவோரும் உழைப்போரும்
உயிர்வாழா நிலையிருந்தும்,

மதமென்றும் சாதியென்றும்
மடம்பரவப் பார்த்திருந்தும்
முதலினமாம் தமிழினமோ
முழுஅடிமைப் பட்டிருந்தும்,

உரிமைபெற விரும்பாத
உளமென்ன உளமோ?
உடனெழுந்து பாயாத
உரமென்ன உரமோ?

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/88&oldid=1424581" இலிருந்து மீள்விக்கப்பட்டது