பக்கம்:கனிச்சாறு 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111


நேர்மை தருவது கல்வி - நம்மை
நிமிர்ந்திட வைப்பது கல்வி!
சீர்மை நடுநிலை யோடு - செயல்
சேர்ந்து செழிப்பது கல்வி!

இறைமை உணர்வது கல்வி உயிர்க்
கேற்றம் கொடுப்பது கல்வி!
மறைபொருள் உண்மைகள் யாவும் - காண
மனக்கண் திறப்பது கல்வி!


உயிருக் குறுதுணை கல்வி - இவ்
வுடலின் வழித்துணை கல்வி!
பயிருக்கு நீரினைப் போல -அன்பைப்
பாய்ச்சி வளர்ப்பது கல்வி!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/146&oldid=1440815" இலிருந்து மீள்விக்கப்பட்டது