இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 111
நேர்மை தருவது கல்வி - நம்மை
நிமிர்ந்திட வைப்பது கல்வி!
சீர்மை நடுநிலை யோடு - செயல்
சேர்ந்து செழிப்பது கல்வி!
இறைமை உணர்வது கல்வி உயிர்க்
கேற்றம் கொடுப்பது கல்வி!
மறைபொருள் உண்மைகள் யாவும் - காண
மனக்கண் திறப்பது கல்வி!
உயிருக் குறுதுணை கல்வி - இவ்
வுடலின் வழித்துணை கல்வி!
பயிருக்கு நீரினைப் போல -அன்பைப்
பாய்ச்சி வளர்ப்பது கல்வி!
-1986