பக்கம்:கனிச்சாறு 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 கனிச்சாறு – நான்காம் தொகுதி


நிலவெழுதி, ஆற்று
நீரெழுதி - பலர்
நீண்ட பொழுதினைத் தாண்டிவிட்டார்!
மலரினைப் பாடினார்;
மலையினைப் பாடினார்;
மக்களைப் பற்றி, நீ
பாட்டெழுது! - உயர் - பாட்டெழுது!

காதலினால், துன்ப
மோதலினால் - தென்றற்
காற்றையும் ஊற்றையும் பாடிவிட்டார்!
சாதலைப் பாடினார்;
ஈதலைப் பாடினார்,
சழக்கரைப் பற்றி, நீ -
பாட்டெழுது! - வெற்றிப் - பாட்டெழுது!

புல்லினைப் பார்; ஒரு
புழுவினைப் பார் - குப்பைப்
புழுதியில் உழன்றிடும் மக்களைப்பார்!
தொல்லையைப் பார்; அவர்
துயரினைப் பார்; அதைத்
தோண்டிப் புதைத்திடும்
பாட்டெழுது - மறப் - பாட்டெழுது!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/79&oldid=1440518" இலிருந்து மீள்விக்கப்பட்டது