இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 69
78
காந்தித் தாத்தா!
ஊருக் கெல்லாம் ஒரே தாத்தா
காந்தித் தாத்தா - இந்த
உலகுக் கெல்லாம் நல்லத் தாத்தா
காந்தித் தாத்தா!
பாருக்குள்ளே ஒற்றுமைக்குப்
பாடுகள் பட்டே உள்ளப்
பாங்கினை உயர்த்திய
காந்தித் தாத்தா!
இன்பத் துள்ளும் எளிய முறை
வாழ்வைக் கொண்டவர்! - மற்ற
யாவரினும் உயர்ந்த வகை
இன்பம் கண்டவர்!
துன்பத் துள்ளும் கலங்கிடாமல்
துணிந்து நின்றவர் - பல
தீமை செய்யும் மாந்தர்களை
அன்பில் வென்றவர்!
-1960