பக்கம்:கனிச்சாறு 5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  69


78

காந்தித் தாத்தா!


ஊருக் கெல்லாம் ஒரே தாத்தா
காந்தித் தாத்தா - இந்த
உலகுக் கெல்லாம் நல்லத் தாத்தா
காந்தித் தாத்தா!

பாருக்குள்ளே ஒற்றுமைக்குப்
பாடுகள் பட்டே உள்ளப்
பாங்கினை உயர்த்திய
காந்தித் தாத்தா!

இன்பத் துள்ளும் எளிய முறை
வாழ்வைக் கொண்டவர்! - மற்ற
யாவரினும் உயர்ந்த வகை
இன்பம் கண்டவர்!

துன்பத் துள்ளும் கலங்கிடாமல்
துணிந்து நின்றவர் - பல
தீமை செய்யும் மாந்தர்களை
அன்பில் வென்றவர்!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/103&oldid=1444986" இலிருந்து மீள்விக்கப்பட்டது