உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


பல்லி, தேள், பாம்புகளே! - தீமை
பாய்ச்சும் உயிரினங்காள் ! - உங்கள்
இல்லங்கள் தப்பி - எம்
இடைவந்து வாழ் வாரை
என்றைக்கு மீட்பீரோ?

பொறுமை நிறைநிலமே! - வான்
போர்த்த உருள் உலகே - நெஞ்சில்
வெறுமையும் சூதும்
வெறுப்பும் மிகுந்தாரை
வெடித்து விழுங்காயோ?

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/123&oldid=1445383" இலிருந்து மீள்விக்கப்பட்டது