104 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
78
பாவாணர் தாத்தா தெரியுமா?
பன்மொழி கற்றவர்
பைந்தமிழ்க் குழைப்பவர்
பாவாணர் தாத்தா தெரியுமா? - தம்பி
பாவாணர் தாத்தா தெரியுமா? - அவர்
தென்மொழி ஆய்விலும்
தனித்தமிழ் வாழ்விலும்
திகழ்கின்ற ஞாயிறு புரியுமா?
அறிவினில் சிறந்தவர்!
அன்பினில் மிகுந்தவர்!
அருந்தமிழ் இலக்கணக் கடலவர் - ஒளி
அழகுசேர் கருநிற உடலவர்! - அற
நெறிபிற ழாதவர்!
நிலைகுலை யாதவர்!
நெடுவாடைக் காற்றுக்குப் படலவர்!
பலநூல்கள் யாத்தவர்!
பண்பாடு காத்தவர்!
பதவியைத் தூசென மதிப்பவர் - பொய்ப்
பாராட்டைக் காலினில் மிதிப்பவர்! - இந்த
உலகினில் முதன்மொழி
ஒண்டமிழ் மொழியென
உரைத்தவர்; தீங்கெனில் கொதிப்பவர்!
துன்புற்ற போதிலும்
துவளாத உளத்தவர்!
தொடங்கிய கொள்கையை முடித்தவர்! - திறந்
தோய்கின்ற நூல்பல வடித்தவர்! - நாம்
இன்புற்று வாழ்ந்திட
இராப்பகல் உழைப்பவர்!
என்றுமே நமக்கெலாம் பிடித்தவர்!