212 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
இன்றிருக் குந்தமிழ் நாட்டினர்க் கெந்தமிழ்ப் பற்றெழவே
அன்றிருந் தார்தமிழ் ஆய்ந்தது
போல்அர சாண்டது போல்
ஒன்றிரண் டன்றொரு நூறு குறள்நெறி ஓங்கிடினும்
நன்றுநன் றென்பேன் நனிவாழ்க வென்பேன் நலந்தரவே!
4
மாணவர் தந்தோள் மலையா
நெடுந்தோள்! மறல்மலிதோள்!
மாணவர் ஆண்மை மறிக்கொணா
ஆண்மை! மறைவிலாண்மை
மாணவர் உள்ளம் மடையுடை வெள்ளம்!
மலைவிலுள்ளம்!
மாணவர் ஆர்க்கும் குறள்நெறி கண்டான் மறைமலையே!
5
ஏலும் வகையெலாம் இன்றே
முனையும்! எழிற்றமிழ்த்தாய்
மேலும் சிறப்புற மேம்பணி யாற்றும்! மிளிர்கலைகள்
நாலும் உரைக்கும்; நலிந்த தமிழர் நலம்பெறவே
கோலும் வழியொன்று; மறைமலை கண்ட குறள்நெறியே!
6
தூக்கி நிறுத்தும் துவளுமெங் காளையர் தோள்களையே!
தாக்கி முரித்திடும் வெம்பகை சூழ்ந்த தருக்கரையே!
ஊக்கி வளர்த்திடும் அற்றைச் செழுந்தமிழ் ஒண்கலையே!
பூக்குந் தமிழ்க்குலத் திற்குக் குறள்நெறி புத்தெருவே!
7
176
‘ஐயை’ நூலுக்குப் படையல்!
இன்பினும் துன்பினும் எனையக லாமல்
அன்பினும் பணியினும் அயரா துதவிடும்
பெண்ணின் நல்லாள் தீதிலாப் பேதை
தண்ணியள் மனைவி தாமரைக் கிதுவே!