பக்கம்:கனிச்சாறு 8.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103

நெஞ்சேந்தும்! நடையில் வீரம்
தாவேந்திச் சதிராடும்! இனப்பற்றுத்
தழைத்துவரும்! தமிழ்நாட் டுக்குக்
காவேந்தி வல்பகையை ஓட்டிவிடும்
திறம்முகிழ்க்கும்! காண்பாய் இன்றே!

அத்தகைய புதுமைப்பா, புரட்சிப்பா
ஆக்கிவைத்த அண்ணலுக்கே
இத்தகைய விழாவெடுப்பார் எந்தமிழர்
இழிவுக்கா ஏற்றஞ் செய்வார்!
புத்தகத்தைப் புரட்டாமல் புழுத்திருக்கும்
இந்துமதம் புரட்டு கின்ற
எத்தகத்தைக் கண்டுகொள்வார் எந்தமிழர்
இனிவருநாள்! ஏற்றங் காண்பார்!

முடிவுரை!

அன்புடைப் பெரியீர்! அருமைத் தமிழரீர்!
இன்பம் தந்த இனியபா வரங்கம்
ஒருவா றாக உய்வைத் தந்தது!
கருவாய் இருந்த தமிழ்நலம் கனிந்தது!
எண்ணிப் பாருங்கள்! எந்தமிழ் வாழும்
மண்ணில் பாரதி தாசனார் வந்து
பிறந்திரா திருந்தால்...! உணர்வு பிறக்குமா?
இறந்திரா திருந்தால்...! என்னென்ன விளையும்?
எண்ணிப் பாருங்கள்! எண்ணிப் பாருங்கள்!
கண்ணினா லன்று! கருத்தில் பாருங்கள்!

பாவேந்தர் பிறந்தார்! பாட்டினி லேஓர்
ஆவல் பிறந்தது! தமிழர் அனைவரும்
பாட்டுத் திறத்தினில் பாரையே வெல்லுவார்!
நாட்டுப் பற்றும், நன்மொழிப் பற்றும்
பாட்டால் வளரும் பான்மையை அறிக!
பாட்டுப்புலவன் பாரதி தாசன்
ஊட்டிய உணர்வால் ஊமையும் பாடினான்!
காட்டிய கருத்தால் கண்ணிலான் கண்டான்!

தென்றலாய்ப் பாடினான்! தீந்தமிழ் சொன்னான்!
தென்றலடிக்கும் திறத்தைப் பாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/117&oldid=1448454" இலிருந்து மீள்விக்கப்பட்டது