பக்கம்:கனிச்சாறு 8.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  169


2. இனவுணர்வு!

இனம்பாடி இனம்பாடி இனம்விழிக்கும் என்றே
எதிர்பார்த்தான் பாவேந்தன்! இனும்விடிய வில்லை.
மனம்போன படிவாழ்ந்து மாக்களினும் கேடாய்
மண்ணுலகில் தமிழினந்தான் பின்னடைந்த தென்று
பெனம்பெரிய பெருமையினை நாம்வாங்கிக் கொண்டோம்
பேசுகின்றோம்! வீசுகின்றோம்! பெருத்தநடைபோட்டோம்!
இனும்திருந்த வில்லையெனில் என்றுந்திருந் தோம்நாம்!
‘இன்னலிலே துயில்கின்றோம்’ பாவேந்தன் சொல்வான்!

‘இன்னலிலேதமிழ் நாட்டினிலே உள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கி,என்

ஆவியில் வந்து கலந்ததுவே!’


‘இருட்டறையில் உள்ளதடா உலகமெலாம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றான்’
என்றான்!

திருட்டுக்கூட் டம்தமிழர் கூட்டமென்று சொல்வேன்!
தில்லுமல்லுக் கூட்டமிது; இல்லையென்று சொன்னால்
குருட்டடியாய்ப் பாவேந்தன் பாட்டையெல்லாம் கூட்டங்
கூட்டந்தோறும்சொல்லிப் பெரும்புலவர் போல்
மருட்டுவமா மக்களைநாம்? சொன்னவற்றுள் ஒன்றை
மதிப்பிற்கே னும்செய்து பெருமைபெற் றோமா?

அதைக்கண்டு வருந்துகின்றான் பாவேந்தன் இங்கே!
அப்பாட்டில் அவன்ஏக்கம் கனவெல்லாம் தோன்றும்!

“தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழுண்டா? ஒழுக்கம் உண்டா?
அமைவுறச் சிறிதுமுண்டா
அன்றைய மறத்த னந்தான்?
கமழ்ந்திடல் உண்டா கல்வி?
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளவி லேனும்
ஒற்றுமை உண்டா?”

‘சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?

சமயம் சாதி தவிர்வ தெந்நாள்?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/183&oldid=1448623" இலிருந்து மீள்விக்கப்பட்டது