பக்கம்:கனிச்சாறு 8.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

செந்தமிழ்க்கே நாமிருப்போம் என்னில்,அவர் கொடையே!
செந்தமிழ்க்கே வாழ்ந்தவரும் செத்தொழிவ துண்டோ?
செந்தமிழும் வாழும்வரை அவர்தமிழும் வாழும்!

செந்தமிழ்மேல் பாவேந்தன் வைத்தபெரும் அன்பைச்
சிறுமைபெற வெறியென்னும் வெறிநாய்கள் மட்டும்
தந்தம்மொழி மேல்வைக்க விலையா,இந் நாட்டில்?
தாய்மொழிமேல் அன்புவைத்தே இனம்பேணல் தீதா?
இந்திமொழி மேலவர்கள் வெறியின்றித் தானோ
‘எல்லாரும் இந்திபடித் திடுக’ என மொழிவார்!
சொந்தமொழிக் குயர்வின்றி இனந்தாழும் போது
சொத்தைமொழி பிறமொழியைப் போற்றுவதே தீது.

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே!


தமிழ்வளர்ச்சி யாலிந்த வையகமே உய்மாம்!
தண்டமிழ்ப்பா வேந்தனவன் சொல்லுவதைக் கேட்பீர்!

‘வையகமே உய்யுமாறு, வாய்த்த தமிழ்

என் அரும் பேறு’


தமிழ்வளர்ச்சித் திட்டமொன்றே அவனின் தமிழியக்கம்
தமிழியக்கம் நூல்போதும் அவன்பெருமை சாற்ற!
தமிழ்வளர்க்காத் தமிழினமோ தான்வளர்தல் இல்லை!
தன்மொழிகா வாதஇனம் வளர்ந்ததுண்டோ உலகில்?

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!

உன்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற

வெற்றியெலாம் உன்றன் வெற்றி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/182&oldid=1448619" இலிருந்து மீள்விக்கப்பட்டது