18☐ கனிச்சாறு - எட்டாம் தொகுதி
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்.
பாவேந்தர் பாடிய பள்ளி எழுச்சி!
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேற்றம்
கண்டறிவாய்! எழுந்திருநீ;
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும்நீ
படைப்பாய்! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெல்லாம்
உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா அறஞ்செய்வாய்!
நாம டைந்த
துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்!
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே!
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை
வயிற்றுக் கூற்றக்