பக்கம்:கனிச்சாறு 8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


தமிழர்க் குள்ளொளி ஏற்றவும் பாடிய
புரட்சிக் கருத்துகள் புனைந்த பாக்கள்!
மருட்சிக் கொண்டவர் மயக்கம் தெளியச்
செந்தமிழ் தன்னைக் கருவியாய்க் கொண்டு
எந்தமிழ் நாடு செழிக்கப் பாடினார்.

இத்தகு பாவலர் ஏற்றம் போற்றிட
எத்தகு புலவரும் ஏற்றம் பெற்றிலர்.

புரட்சிப் பாவலர் நினைவு விழாவில்
திரட்சி யான செந்தமிழ்ச் சொல்மழை
பொழிவித் திடற்கே புலவர் இருவர்
வந்திருக் கின்றனர்; அவரையும் வாழ்த்துவேன்!
எந்தமிழ் மொழியின் ஏற்றம் விளக்கிட
அன்னர் தம்மையும் யானழைக் கின்றேன்.
என்றன் முன்னுரை இதனொடு முடித்துப்
பின்னுரை யாக இனும்சில பேசுவேன்.
பாட்டுரை செய்கெனக் கேட்டுக் கொண்டதால்
பாட்டால் பாவேந்தர் திறத்தைப் பாடினேன்.
கேட்டுக் கொள்ள அணியமாய் இருந்தே
இறுதி நொடிவரை இருப்பீ ராயின்
உரையால் பின்னுரை சொல்வேன்; யாவரும்
இரையாதிருந்து விழாச்சிறப் புறும்படி
அமைந்து கேட்க அன்பினால் வேண்டுவேன்.

(பின்னுரை உரையாக நிகழ்த்தியதால், இங்குத் தொகுப்பில்
இடம்பெறவில்லை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/40&oldid=1447656" இலிருந்து மீள்விக்கப்பட்டது