56 ☐ கனிச்சாறு - எட்டாம் தொகுதி
துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில்
புதுவைப் புலவன் கற்பனை வளத்தில்
எதுவெடுத் துரைப்பேன்? எதனை விடுப்பேன்!
கற்பனைத் தேனாறு! கவின்நிலா வானம்!
பொற்புனைந் தெடுத்த புதுமணப் பூக்கள்!
‘முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற
- என்று, அவர் காயும் தலைவியின் ஏசலில்
நின்ற கற்பனை நினைத்து மகிழ்மின்!
மேலும் அத்தலைவி பகலினைக் கடிவாள்!
ஏலுமா நமக்கு ? இத்தகு கற்பனை!
“மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து
பாரதி தாசன்,தன் உள்ளக் கொதிப்பைப்
பாரதிர முழக்குதல் பாருங்கள் இங்கே;
‘மண்மீதில் உழைப்போ ரெல்லாம்
வறியராம்: உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்;இ தைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
எப்படி? அவர்தாம் இயம்பிய கற்பனை?
இப்படிப் புரட்சியாய் எழுதிய தவர்மனம்!
அடுத்து, ஒரு புலவருக் கிருக்கும் ஆற்றல்
எடுத்தது உவமையால் விளக்குதல்; இல்லையா?
பாவேந்தர் உவமைகள் பழுதிலா உவமைகள்.
‘பொரியலோ பூனைக்கண்போல் பொலிந்திடும்' என்பார்.
‘குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீறல்கள்போல்
- என்று கேட்பார்!