பக்கம்:கனிச்சாறு 8.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  57


‘கேள்வியால் அகலும் மடமைபோல்

நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது’


என்றே அறிவோடு உவமையைப் பொருத்துவார்.

பரிதியின் வரவால் இருள்வில கியதை,

‘தொட்டியின் நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது’

- என்பார்!

- இங்கோர் ஏழைக் குடிசை!
மிகவும் சிறியது; மிகமிகச் சிறியது!
புகவும் இயலாப் புன்மைக் குடில் அது!
எப்படிச் சொல்வீர் அதனை? எண்ணுங்கள்!
அப்படிச் சொன்னால் அனைவர்க்கும் விளங்குமா?
இப்படிச் சொன்னால் எல்லார்க்கும் தெரியுமா?
என்றே எண்ணி, எண்ணி இயம்புதற்
கொன்றும் இயலாமல் உழல்கையில் சொல்வார்:

‘கூனன் புகுந்தாலும் குனிந்து புகும்குடிசை’

எப்படி அவர்தம் உவமை இயல்திறம்?
சிட்டுக் குருவியை எல்லோரும் கண்டோம்!

“கொத்தும் அதன்மூக்கு முல்லை யரும்பு!

மல்லிபிளந்தது போன்றது அதன்கண்”!

என்றுசொன் னோமா? பாவேந்தர் சொன்னார்!

‘பின்னிய ஆடை காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து

நளிர்கடல் நெளிதல்’ கண்டார்!

நாம்கண் டோமா? நறுக்கென
ஊம்எனும் முன்னே, உவமையால் விளக்கிய
புலவன் பாரதி தாசனைப் போலச்
சிலபேர் இருப்பார்; பலபேர் இருக்கார்!

“காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்தகுடை தூக்கி - நல்ல
கல்விக் கழகமதை நோக்கி - காய்ச்சும்
பாலுக்கு நிகர்மொழிப் பாவைநீ செல்லுவதைப்
பார்க்கும் இன்பந்தானடி பாக்கி!

மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற் றாடைகட்டி

வீட்டினின்றும் ஆட்டமயில் போலே - கைம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/71&oldid=1448031" இலிருந்து மீள்விக்கப்பட்டது