பக்கம்:கனியமுது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

பெய்மழையால்

நேர்ந்த ஒழுக்கினையே நேர்செய்காள்; மேல்நனைந்தாள்!
தாக்குந் துயரெல்லாம் தான்செய் பிழையென்று
நோக்கமாட் டாளோ? நொடியும் உணராளோ?”
என்பே றேங்கி நின்றான் ஏமாந்த வாலிபனும்!

சென்றதை எண்ணியதால் சீற்றம் பிறந்ததே !



அன்று மறுநாள் அகன்ற மணவாளனை
நின்றெதிர் பார்த்தனள் : நேரந்தான் சென்றது !
மீண்டிட வில்லை ! விழிநீர் பெருகிடவே—
‘மாண்டிட என்னைவிட்டு மற்றெங்கே சென்றிட்டார்?
கண்டு வருவேன்’ எனக் கண்ணீர்க் கனலடக்கிக்
கொண்டு, புறப்பட்டாள்; கூடுகின்ற சந்தைக்கு!
மக்கள்; பெருவெள்ளம் மண்டியெதிர் பாய்ந்தது போல்

மிக்கவிரை வாகவொரு திக்கிற் செலக்கண்டாள்.

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/114&oldid=1380189" இலிருந்து மீள்விக்கப்பட்டது