இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
பெய்மழையால்
நேர்ந்த ஒழுக்கினையே நேர்செய்காள்; மேல்நனைந்தாள்!
தாக்குந் துயரெல்லாம் தான்செய் பிழையென்று
நோக்கமாட் டாளோ? நொடியும் உணராளோ?”
என்பே றேங்கி நின்றான் ஏமாந்த வாலிபனும்!
அன்று மறுநாள் அகன்ற மணவாளனை
நின்றெதிர் பார்த்தனள் : நேரந்தான் சென்றது !
மீண்டிட வில்லை ! விழிநீர் பெருகிடவே—
‘மாண்டிட என்னைவிட்டு மற்றெங்கே சென்றிட்டார்?
கண்டு வருவேன்’ எனக் கண்ணீர்க் கனலடக்கிக்
கொண்டு, புறப்பட்டாள்; கூடுகின்ற சந்தைக்கு!
மக்கள்; பெருவெள்ளம் மண்டியெதிர் பாய்ந்தது போல்
103