பக்கம்:கனியமுது.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


"அன்று நீ ஏர்முனையில் ஆழத் துளைத்தது
நீளப் புதைத்த எம் நெய்செல் குழாயாகும்! பாழாக்கிப்போட்டனையேபாவி"யென அண்டையுளார்
கூவியது கேட்டாள், குதூகலித்தாள் கோவையிதழ்ப்
பாவை தவித்தாள் பதற்றமும், "தேவையில்லா

ஆபத்துச் சூழ்ந்ததென அஞ்சினேன், அம்மம்மா!
பாபத்தைத் தூண்டிவிடும் பண்பற்ற செல்வமே!

இல்லறத்தால் ஏற்படும் ஈடற்ற இன்பத்தைக்
கொல்ல வரும் நச்சரவே! கோடி கொடுத்தாலும்
எத்தனையோ தோல்வி இடையூறு நேர்ந்தபின்னர்க்
கொத்து மலராய்க் குவிந்திட்ட பேரின்பம்
வாய்த்திடுமோ?" என்றாள் -மனமகிழ வாழ்ந்திட்டாள்!

133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/144&oldid=1380153" இலிருந்து மீள்விக்கப்பட்டது