பக்கம்:கனியமுது.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

பார்த்தவர்கள் விருத்தகிரி மருத்து வர்பால்
    பதைபதைத்துத் துடிதுடித்துத் தூக்கிச் சென்று
சேர்த்துவிட்டார்! சிதறாத சிந்தை யோடு-
    செயலற்றுக் கிடப்பவனைக் கவனிக் காமல்
“யார்தருவார் என்தொகையை இவன்சார் பாக?”
    என்றவுடன் எதிர்நின்ற எவனோ தந்தான் !
வேர்த்துவிட்ட முகந்துடைத்துச் சிகிச்சை செய்தார் ;
     விழுந்திருந்த இருகடிதம் படித்துப் பார்த்தார் !


கண் திறந்தார் நோயாளி அல்ல; அந்தக்
    காசாசை மருத்துவரே நூறு ரூபாய் கண்
திறவாக் கருப்புசாமி மனைவி பேர்க்குக்
    கவனமுடன் அஞ்சலிலே அனுப்பி விட்டார் !
புண்துடைத்தார்! நோயாளன் மீதில் அல்ல;
    புன்மனத்தில் தன்னலத்தைத் தூய்மை செய்தார்.
விண்தொடுமோர் உயரத்தை விரைவில் எய்தி,
   விலகாத புகழ்மகுடம் சூட்டிக் கொண்டார்!

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/79&oldid=1383235" இலிருந்து மீள்விக்கப்பட்டது