பக்கம்:கனியமுது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'கோடிவீட்டுக் குமரப்பன் இங்கி ருந்தால் -

குளக்கரையில் எருமைகளை மேய்த்து நிற்பான்;

ஒடிவிட்டான் சென்னேக்கே திரைப்ப டத்தில்

ஒய்வின்றி நடிப்பதாக ஊரே பேசும் !

மாடிவீடாம்! வாகனமாம் ! யார்கண் டார்கள் ?

வாரிவிட்ட சுருண்டமுடி கழுத்தில் தொங்கக்

கூடிவிடும் பாமரர்க்குக் கதைசொல் கின்ருன் :

குவிந்துள்ள செல்வமெலாம் அங்கே தானும்!

பட்டணத்து வாழ்க்கையினைக் குறிக்கோ ளாக்கிப், -

பயின்றிருந்த கணக்கெழுதும் தொழிலே கம்பிப்,

பட்டிக்கா டாகியதன் சிற்றுார் விட்டுப், -

பரம்பரையாய் வசித்துவந்த குடிலே நீங்கிக்,

கட்டணத்துக் காகவொரு நகையை விற்றுக்

கடிதுசெலும் தொடர்வண்டி எறிச் சென்றான்.

பெட்டி,சட்டித், துணிமூட்டை பழைய சாமான்,

பெண்டாட்டி, குழந்தையுடன் கன்னி யப்பன் !

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/80&oldid=1382716" இலிருந்து மீள்விக்கப்பட்டது