பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப் போட்டுக்கிடுங்க: ஒரு செகண்டிலே திரும்பி வந்திடுங்கி பார்வதி. என்று கெஞ்சினான், 'புனிதமான அன்புத் தேவதையான உங்களைப் புனிதமானதொரு கல்யாணப் பெண்ணாக அன்பின் புனிதத்தோட வரவேற்கக் காத்துத் தவம் இருப்பேன், பாரு' - பேச்சை முடித்தான்! பரபரப்புக்கூடிய நடப்பு: நடவடிக்கை. 'ஆகட்டும்!' என்றாள் பார்வதி. கைந்நொடிப் பொழுது தயங்கின்ாள்; பின் உடைகளோடு உள் நடந்: தாள். 'கல்யாணம்னா தாலி வேணுமே?...செந்தில் மறந் திட்டாரோ, என்னமோ, தெரியலையே?-அவள் செருமு: கிறாளா, இல்லை, பொருமுகிறாளா? அந்த அந்தரங்கம் அவளுடைய அந்தரங்கத்துக்கே புரியவில்லை! அப்போதைய வினாடிகளுக்கு மகிமை கூடுதல்! அதன் விண்வெளியில் மிதந்தான். அப்பாவும் அம்மா வும் கொடுத்து வச்சவங்கதான்; அவங்களோட இறுதிக் கனவு பூர்த்தியடைஞ்சிடப் போகு து: ஆமாம்; என்னோட கடைசிக் கடமையும் நிறைவேறப் போகுது!- அப்பர்லே, எனக்குக் கவலையே கிடையாதாக்கும்!..அதோ, என் னோட சொப்பனத் தேவதை!...ஆசைஆசையாக நான், கண்ட கனவை ஏதோ ஒரு வகையிலே - வழியிலே நன வாக்கப் போறவங்களாச்சே பார்வதி!' -பதட்டத்தோடு பார்வதியை வரவேற்றான் செந்தில். உணர்ச்சிப் பிழம்பாக நின்றாள் பார்வதி!-தீப் பிழம்பில் கோலவிழிகள் சிரிக்கின்றன; இதழ்களுக்கும் சிரிக்கத் தெரிந்திருந்தது; இளமையின் கவர்ச்சியில்: பொலிந்த அழகான மார்பகம் அழகாகவே எம்பி எம்பித் தாழ்கிறது. பூவும் பொட்டும் மங்கலம் பாடின. தன் தாய் தந்தையரின் பாசச் சூழலிலே நின்று கொண்டிருப்பதாகவே அவள் உணர்வு அப்போது அவளுக்குச் சொல்லிக் கொடுத் திருக்கவேண்டும். ந்ெந்தியில் நெளிந்த பூ விரல்கள் கழுத் திற்கு ஓடி வந்ததுதான் தாமதம், அவளுக்குச் சுருக்

111

111