பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமர்ப்பித்தாள். அவனுடைய தளிர் விரல்கள் அவளது பூ விரல்களைத் தீண்டியிருக்கலாம். அவள் மறுகணத்தில் திகைத்தாள். அவனுடைய வலது கைச் சுட்டுவிரலைத் தொட்டாள். நகக்கண்ணிலே ரத்தக்கறை தரிசனம் தரவே திடுக்கிட்டாள். கன்னிமனம் கனிந்திட கயல் விழிகள் கசி கின்றன. ஐயையோ, விரல் பலமா அடிபட்டுப் போச்சு ரத் தக்கறை இன்னமும் மறையக் காணோமே? நான் அப்பறம் இதுக்கு முதல் உதவி செய்கிறேன்,' என்று சொல்வி, எச்சிலைத் தொட்டு, அந்த விரலையும் தொட்டு ரத்தக்கறையை அழித்தாள். 'ஆல்ரைட்... அட்டென்ஷன் ப்ளிஸ்!' - ஒரவிழி காட்டி ஆணை கூட்டினாள். 'கெட்டி மேளம்...கெட்டி மேளம்!' என்றாள். அப்பா- அம்மா வுக்கு ஆணைச் சத்தம் கேட்கவேண்டும் அல்லவா? என்ன ஆச்சர்யம்! கெட்டி மேளம் கொட்டி முழக்கியது. நாதசுரம் கொட்டாமலே முழங்கியது. அம்முக்குட்டி டேப் ரெகார்டருடன் நின்றாள். 'அக்கா, அக்கா! சுற்றிலும் பாருங்க; உங்களோட பூஜை அறைத் தெய்வங்க எல்லாம் உங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்குது சேவிச்சுக்கிடுங்க!' - முருகையன்! ராமையாப் பயலுக்கு வாயெல்லாம் பல். கூப்பிய இரு ஜோடிக் கரங்களும் கூப்பியபடியே இருந்தன. இத்துணை சந்தோஷத்தையும் இத்தனை நாட்களாக இந்தப் பாருக்குட்டி எங்கே ஒளித்து மறைத்து வைத்திருந் தாளோ?-'அப்பா. அம்மா! உங்க இரண்டு பேரையும் திரிகரண சுத்தியோட நானும் மாப்பிள்ளையும் கும்பிட்டுக் கிடுறோம். மாலையும் கழுத்துமா நிற்கிற உங்க பாருக் குட்டிக்கு உங்க மாப்பிள்ளை தாலிகட்டப் போறார்! கண்கண்ட மனித தெய்வங்களாக இருந்து எங்களை

$30,

130