பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினிச் சிலையின் அழகு முகமும் அழகுக் கண்களும் அழகாகவே வீங்கிக் கிடக்கின்றன; தளிர் விரல்களோ, மார்பகத்தில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மஞ்சள் தாலியோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டி ருந்தன!-என்னவோ அரவம்! - யார், செந்தில் அல்லவா? பார்வதி, நான் புறப்படுறேனுங்க!' ஊகூம்; நீங்க புறப்படக் கூடாதுங்க, செந்தில்!' என் கடமைதான் முடிஞ்சிட்டுதே?', 'என் கணக்குப்படி, உங்க முதல் உதவிதான் இப்போ முடிஞ்சிருக்கு; ஆனா, உங்க கடமை இனித்தான் ஆரம்ப மாக வேணுமுங்க!-நீங்க எங்கழுத்திலே கட்டின மஞ்சள் தாலியிலே பூசின மஞ்சளோட ஈரம் இன்னங்கூட காயலிங் களே? அதுக்குள்ளே, எங்கே புறப்பட்டுட்டீங்க?...ஏன் புறப்படுநீங்க?" செந்தில் விரக்தியின் வேதனையைத் தாளமாட்டாமல் ஒப்பனைக்காகச் சிரிக்க முயற்சி செய்கிறான்; நெற்றித் திட்டில் ரத்தச் கிகப்பாகப் பளிச்சிட்ட குங்குமத்தைக் கைவிரல்கள் தடவிப் பார்க்கின்றன. எச்சரிக்கையோடு வாசலை மறுபடியும் பார்த்தான். அவர் எதிர்பார்த்திருந்த படி, வெளிப்புறத்திலே போலீஸ் ஜீப் வந்து நின்றதைப் பார்த்ததும், அவன் மறுமுறையாகவும் வெற்றிச் சிரிப்பு சிரித்தான். இப்போது அவன் பார்வதியைப் பார்வையிட லானான். மிஸ் பார்வதி! நீங்களுமா இப்போது என்னைச் சோதிக்க வேணும்?' என்று கேட்டான். பார்வதி ஈரல் குலை நடுங்கத் திடுக்கிட்டாள். மிஸ் பார்வதியா? இப்ப நீங்கதானே. என்னை சோதிக்கிறீங்க, செந்தில்?’’ தொண்டை அடைக்கிறது. - 'வாஸ்தவந்தான்; நான்தான் இப்போ உங்களைச் சோதிக்கிறேன், மிஸ் பார்வதி!'

星岛莎

135