பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்னுகூட சமயங்களிலே என்னை நானே நொந்துக் கிட்டதும் உண்டு!- நான் சீமான்மகன்தான்; ஆனாலும், ஏழை பாழைங்கதான் என்னோட உலகமாகவும். எனக்கு உலகமாகவும் இருந்து வர் றாங்க; இது சத்தியமான உண்மை. இதைப் பட்டணத்துப் பணக்கார வட்டாரம் பூராவுமே அறியும்! சரி, விஷயத்துக்கு வந்திடுறேன். பெரிய இடங்கள் எல்லாத்திலேயும் பெரிய பிரச்னையாவே இருந்துக்கிணு வருற வரதட்சணை கொடுமைக்கு நானும் விலக்கு விதியாக இருக்க மாட்டேன்னு கருதியோ என்னமோ, உன் பேரிலே மாறாத உள்ளன்பை வச்சுக்கிட் டிருந்த என்னையும், நான் உனக்கு அன்பான நம்பிக்கை யோடு சேலத்திலேயிருந்து எழுதின காதல் கடிதத்தையும் நீ உதாசீனம் செஞ்சிட்டே என்றாலும், என்னோட முதல் காதல் எப்படியும் வெற்றி பெறும் என்கிறது நம்பிக்கை என் மனசிலே எப்பவும்ே இருந்து வந்திச்சு, அதனாலேதான், வழக்கமான என்னோட சமூக நலச் சேவைகளிலே மனசைச் செலுத்தி ஆறுதல் அடைய வும் முடிஞ்சுது. இடையிலே குறுக்கிட்ட் தாராவை நீயும் மறந்திடு!..இனி என்னாலே பேச முடியாது! ... ஒண்ணை மட்டும் சொல்லி முடிச்சிடுறேன்: உண்மையும் தருமமுமான சத்தியத்தைத் தேடித்தேடி அலைஞ்சு திரிஞ்சிக்கிட்டு இருக் கிற எனக்கு நீயே ஒரு சத்தியமாக ஆகியிருக்கிறது. நான் இந்த ஜன்மத்திலே செஞ்ச பாக்கியம்தான்!...அன்பே வடிவான உனக்காகவும், உன்னோட பரிசுத்தமான அன்புக் காகவும் மாத்திரமே, நான் உன்னை என்னோட மனசாலும் உயிராலும் உணர்வாலும் சதாசர்வகாலமும் உன்னையே - உன் ஒருத்தியையே பாசத்தோடவும் பந்தத்தோடவும், ஏன் பக்தியோடவும் கூடநேசிச்சுக்கிட்டிருந்த எனக்கு-இந்தி மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடுற எளியவனுக்கு ஒரு தேவலோகத்துப் பாரிஜாதப் பூ சொந்தபந்தம் என்கிற உரிமையான உறவு முறையிலே கிடைக்கிறதென்றால்: அந்தப் பாக்கியத்துக்குப் பூர்வஜென்மப் பந்தமே தான் காரணமாக இருக்கவும்.வேணும்!.ஆஹா! நான் கூட பூர்வி

9 1.37

137