பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைக்கணத்தில் ஆண்டவனை ஆங்கிலத்தில் கூவி அழைத்து, கால் வினாடி வருந்தினார் பிரதிநிதி. சம்பவம் ஒன்றினை நினைவூட்டினார். தமிழ்ப்பேச்சுப் போட்டி ஒன்று, அனைத்துக் கல்லூரிகளின் சார்பில் நடந்த சமயத் தில் ராணிமேரி கல்லூரியிலிருந்து போட்டியில் கலந்து கொண்ட பார்வதி தங்கப்பதக்கத்தை வென்று தமிழ் வீராங்கனையாக நின்ற நிகழ்ச்சியை விளக்கியதோடு, அந்தப் போட்டியில தானும் பங்கு கொண்டு மண்ணைக் கவ்வின துயரத்தையும் வர்ணித்தார் இளைஞர். இதை நீங்க வச்சுக்கங்க', என்று கூறி, மற்றொரு பார்வையாளர். அட்டையையும் சமர்ப்பித்தார். கனவுக் காட்சிகளிலே மிதந்தாள் பார்வதி - தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டபோது, "பார்வதி என்று அன்புடன் விளித் துப் பாராட்டுத் தெரிவித்த அந்த வாலி பர் இவராகத்தான் இருக்க வேண்டும்! உங்க பேரைச் சொல்லலையே?’ "நீங்க அதைக் கேட்கலையே?- ஒ.கே! என்னோட பெயர்: தமிழ்மணி!... இனி மறுதரம் உங்களைச்சந்திக்கக் கூடியபாக்கியம் கிடைச்சா, உங்க கையிலே நான் அசல் தமிழிலேயே பேசி மகிழ்வேன், பார்வதி!' 'ரொம்ப நன்றி; ஐயாவை போய்ப் பாருங்க!' உரிமையாளரின் அறைக்கு வெளியே ஜாக்கிரதைப் பிராணி எதுவும் தரிசனம் தராத காரணம் கொண்டு, தமிழ்மணி உள்ளே நுழைந்தான்! தமிழ்த் சிரைப்படத் துறைப் பிரதிநிதி ஒருவர் தோன்றினர். - சேப்ளிஸ் வெயிட் ஏ மினிட்!” பார்வதிக்குக் கருமத்திலேதான் கண்!-ஐயாவின் பேரில் படத் துறையின் கொள்ளிக் கண்ணுமா பட்டுத் தொலைக்க வேண்டும்? - ஊம்: பணத்திற்கு போகவும் வரவும் வடிகால் வேண்டுமோ?- உள்மனம் சலனம் கண்

28

28