பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒ: அக்காவா? வணக்கம். வணக்கம். புஸ்தகம் பண்டல் போடுறதிலே அக்கா வந்ததைக்கூட கவனிக்க முடியல்லீங்க! ஒரே பேஜார் பிடிச்ச ஜோலியாய்ப் போச் சுங்க, அக்கா!' திரும்புகிற்ாள் பார்வதி. "குட் மார்னிங், மிஸ் பார்வதி!' "குட் மார்னிங், மிஸ்டர் கமல்!" 1985 வெளியீடுகள் என்னும் 'அபய அறிவிப்பு'ச் செய்த விலைப்பட்டியல்கள் அம்பாரமாகக்குவிந்து கிடந்த மேசைக்கடியில் தலையைக் கூட்டுக்குள்ளே முடக்கிக் கொண்ட நத்தையைப்போலக்காட்சியளித்தவண்ணம் பில் போடுவதில் மூழ்கியிருந்த பூபேந்திரகுமார் மட்டுந்தான் வாயைத் திறக்கவில்லை!-அர்த்தம் இல்லாத அவனுடைய பார்வையின் நியாயப் படுத்த முடியாத அடாவடியை அங்கீகரிக்க மறுத்த பார்வதி, வாயைத் திறந்து பத்துப்பன் னிரண்டு பேர் முன்னிலையில் பகிரங்கமாகச் சூடு கொடுத்த அந்தச் சோக நிகழ்ச்சியை அதற்குள்ளே மறந்து விடமாட் டான் அவன்! பார்வதியைப் பார்த்தது மூலமுதலான மகாலட்சு மியைத் தரிசித்ததுபோலவே இருக்கிறதாம்! - காஷியர் சுப்பையா விமர்சனம் செய்தார். இவரும் வலையப்பட்டி தான். ரோசி பரிதாபம் மேலிட ஒடி வந்தாள்: மடித்திருந்த பக்கத்தைச் சுட்டினாள். - - நாட்டு மக்களுக்குப் பிரதமர் ராஜிவ்காந்தியின் அறை கூவல்'- பார்வதி வாசித்தாள். 'அதுக்குக் கீழே..!" என்று திருத்தினாள் சிலுவைக்காரி. ார்வதி வாசித்தாள்: - - கொடுத் தகெடுப்பிரகாரம் வரதட்சணைப்பாக்கியைக்

毒貌

30