பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோசியின் பங்கில் தோசையும் கறிகுருமாவும் சுவை காண்பித்தன. உணவு வகைகள் பாகம் பிரித்து கொண்டன. நள பாகம் பிரித்துக் காட்டின. யூசுப் முட்டை ஆம்லெட்டில் பாதியைக் கொண்டு வந்து பார்வதியிடம் கொடுக்க, பார்வதி அதை மூன்று பாகமாக்கித் தோழிமார் இருவரிடமும் கொடுத்தாள்: ஒரு துண்டு அவளுக்கு. பாவம், வத்சலா!- அவள் சுத்தச் சைவம். சாப்பாட்டுப் பிரச்னை தீர்ந்தது. கோனி'- 3 பாண்ட் ரேடியோ-காஸ்ெட் - ரெக் கார்டர்" ஜமாய்த்துக் கொண்டே இருந்தது, சாலமன் தந்த செய்திப் பத்திரிகை ரோசியின் பார் வையில் ஊர்ந்தது. நூர் உன்னிசாவுக்கு மெளனமே ஒரு பொழுது போக்குத்தான். வத்சலாவின் மூச்சுக்காற்று ரோசியின் பக்கம் இழையத் தொடங்கியது. பார்வதியின் கைகளிலே அகல் விளக்கு சுடர் தெறிக் கிறது. வத்சலா கனவுகண்டு விழித்தவள் மாதிரி பார்வதியை நெருங்கி, பாரு! வர்ற ஆவணியிலாவது எங்களுக்குக் கல்யாண விருந்து வச்சுடுவியா ? இனிமேலும் எங்களாலே ஒரு நாள் கூட பொறுத்திருக்க முடியாதாக்கும் ' என்று சண்டித்து எச்சரித்தாள். -

பார்வதி ஏறிட்டு நோக்கிப் புன்னகை செய்தாள்" "எல்லாம் பகவான் கையிலே தான் இருக்கு!’ என்ருள், 'விருந்துக்குக்கூட பகவானையே அரேஞ் செய்துட்டி: யாக்கும் ?' - - -

33