பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்கவுமே பொழுது காணல்லேயே... கடவுளே!' பணி நேரத்தில் சொந்த முறையில் அவள் பத்து நிமிஷங்கனை எடுத்துக்கொண்டது. வெகு அபூர்வம். விரைந்தாள்! உள்ளேபதிப்பகத்திற்கு உரித்தான பரபரப்பு குறைகுடமாகத் தளும்பிக்கொண்டிருந்தது. காலடியில் சிக்கிய அச்சுப்படி ஒன்றை எடுத்து வலம் புரியின் மேஜையில் போட்டுவிட்டு நடந்த பார்வதியின் பூவிரல்கள் தட்டெழுத்துக்களில் விளையாடத் தொடங்: கின. மனத்தின் ம ைமோ, வீட்டைச் சுற்றிச் சுற்றி விளை யாட்டுக் காட்டத் தொடங்கிவிட்ட து! - அப்பாவின் துணையுடன் அம்மா இந்நேரம் மத்தியான்னச் சாப்பாடு: செய்துகொண்டிருப்பாள்; தம்பிப் பயல் பாடங்களில் சிறைப்பட்டிருப்பான், கமலி பூரீரங்கத்தில் தனிமைச் சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டிருப்பாள்; அத் தான். ஃபைல் குவியல்களில் சரணுகதி அடைந்திருப்பார் 1: அத்தான் இல்லாத தனிமையைப் போக்கிட கமலியின் வயிற் றில் ஒரு பூச்சி பொட்டு இனியாகிலும் உண்டானல் தேவலாம்!. நான் கமலியை நினைக்கிற இந்நேரத்தில், கமலி யும் என்ன நினைப்பாளா? நினைத்துப் பார்ப்பாளா ?நினைவுகள் சுழித்தன; பொறை ஏறியது. அரை விடிை திக்கு முக்காடிப் போளுள் : நாடி வந்த குளிர்நீரில் ஒரு வாய் பருகினுள்: இப்பொழுது கமலி கட்டாயம் என்னைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்க வேண்டும்!-அங்கீ காரம் பெற்ற பாசத்தில் பிரகடனம் செய்யப்பட்ட நல் லமைதியில் அவளுடைய கண்கள் தளும்பின. பார்வதியின் கன்னி மனமும் ஆடும் பம்பரமும் ஒன்று: (காஷியர் சொல்ற மாதிரி நான் மகாலட்சுமியாக இருந்தி ருத்தால் எங்க ஒட்டை வீட்டிலேயும் குபேரச் சம்பத்து கொழிச்சிருக்குமே?...பிராப்தம்னு சொல்லப்படுற அதிர்ஷ ட்ம் கூடி வந்திருந்தால், அப்பா - அம்மா மனசு குளிர்

烹参

36