பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- படைக்கிறவன்தான் இந்தப் புதிருக்கும் விடை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான். தாகம் தீர்ந்தாள் பார்வதி. காதலில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்ட அனுதாபத்துக்குரிய பைத்தியக்காரியின் புகைப் படத்தை அமீண்டும் காண்பித்தது: தினசரி ஒன்று. வாங்கிக்கினு வீட்டுக்குத் திரும்புறவரையிலும், அப்பா வோட நெஞ்சுவலி எக்குத்தப்பாக் கூடிப் போயிடாமல் இருந்தால் தேவலாம். தமிழ்ப் படமானால், இம்மாதிரி ஆபத்துச் சமயத்துக்குத் திடுதிப்னு கார் ஒண்னு உதவிக்கு வந்து குதிக்கும்! நான் அத்தனை அதிர்ஷ்டக்காரியா பாசத்தின் துடிப்பில். அங்கிருந்து ஒட்டம் பிடித்து மருந்: கடை வாசலில் நிறு விடவும் துடித்தாள். ஜனங்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந் தார்கள். பனகல் பூங்கா நெருங்கியது. பார்வதி திசைமாறி, திசை திரும்பிப் பாய்ந்து நடத் தாள்!... - இது அநியாயம் இல்லையா? அவளை எதிர்த்துப் பாய்ந்து திரும்பி மடங்கிய நூதன மான பிளஷர். கார் ஒன்று, அவளே முன்னே மறித்துச் “சரே லென்று நின்றது. - 'ஹெல்லோ பார்வதி!' என்று கூவி, முன் ஆசனத் தில் இருந்த மின்னல்கொடியாள் ஒருத்தி அழைத்தாள்." 'க்வீன்' மேரீஸிலே உன்னோட பி, ஏ, படிச்ச அதே சாட்சாத் மாதங்கியேதான் நான்' என்ருள். எங்க அம்மாள் இப்போ பட்டணம் அறிஞ்ச பெஸ் சமூக சேவகியாக்கும்: காரைஒட்டி வந்த ரம்பைனே, திலோத்தமையோ மேலும் சேதி சொன்னாள்.

与事

53