பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறார்; கவலைகளையும் கஷ்டங்களையும் அவர் அந்நேரத் தில் மறந்து விட்டிருக்க வேண்டும். ஜன்னல் கம்பிகளின் வழி: யாகப் படர்ந்திருந்த பின் நிலவின் கம்பீரம் குறையாத வெளிச்சத்தில் அவருடைய முகம் அன்போடும் கருணை யோடும் பாசத்தோடும் பரிவோடும் விளங்கியது. அப்பா!...' பார்வதி முணமுணக்கிறாள்; உந்திக் கமலத்தில் மொட்டு வெடிக்கத் தவித்துத் துடிக்கின்ற கமலமாகக் கண்மூடிக்கிடந்த அழுகை, இருந்திருந்தாற்போல் கண் மலர்ந்து வெடித்து நெஞ்சுக்குள்ளே பாய்கிறது. உள்ளம் மட்டுமல்ல, உடலும்தான் நடுங்கித் தொலைக்கிறது. அவள் எதை நினைப்பாள்? - எதை மறப்பாள்?- நினைவும் மறதியும்தான் வாழ்க்கையா? கனவுகளையும் காட்சிகளை யும் பொய்யாக்கி விட்டு, அவள் மனம் சுழல்கிறது. கனவு. களிலே அவள் அந்தரங்க பூர்வமாகச் சுழல், நனவுகள் அவளுள் அறிவு பூர்வமாக சுழல்கின்றன, என்ன சத்தம்? அம்மா புரண்டு படுக்கிருள்! பார்வதி இப்போதும் சிலையென மலைத்து நிற். கிறாள்; அம்மாவிடம் அப்பா அடிக்கடி சொல்லுவதை நினைத்துக் கொள்கிறாள்: 'சிவகாமி ! உலகத்தில் நடக் கக்கூடியதும் நடக்க வேண்டியதுமான வாழ்க்கை எதுவுமே. அதனதன் விதிப்படியும் பிராப்தப்படியுந்தான் நடக்கும்: நடக்கவும் முடியும். ஆகச்சே, நாம் என்னிக்கோ நடத்தப் போற அல்லது, நடத்த வேண்டிய தெய்வச் சித்தத்தின் பேரிலான கலியாணம் என்கிற கட்டாயமான ஒரு நாட கத்துக்காக, அதற்கான வேளைக்கு முன்னாடியே வெறும், மனுஷர்களாகிய நாம் வீணாக மனசைப் போட்டு அலட் டிக்கிறதிலே எந்த நியாயமும் எந்த அர்த்தமும் இல் லேன்னுதான் எனக்குத் தோணுது!... மூத்தவள் கமலி

10

10