பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் நல்லபடியா நடந்தது மாதிரியே, சின்னவள் பார்வதியோட கலியானமும் நல்லவிதமாகவே நடந்திடும்! என்னை நம்பு; ஏன் தெரியுதா?- நான் தெய்வத்தை நம்புகிறவன்; நம்பிக்கிட்டும் இருக்கிறவன்!-அப்பாவிற்கு வாக்கிலோ. நாக்கிலோ சனியாம்! - சொன்னால் பலிக் குமாம்; சொன்னதும் பலிக்குமாம்! அம்மாவின் நம்பிக்கை இது! அவள் பெருமூச்செறிகிறாள். ஊதல் காற்று. பார்வதிக்குத் திடீரென்று கூதல் நடுங்கியது: எண்ண' களின் சிலிர்ப்பில் கூதல் சிலிர்த்திருக்கலாம். இப்போதெல் லாம் இப்படித்தான் அவளுக்கு அடிக்கடி உடம்புக்கு வந்து விடுகிறது. என்ன செய்வது? - அவள் ஒருத்தி சம் பாதித்தால்தான் உண்டு; இல்லாவிட்டால், நான்கு ஜீவன் களும் பட்டினிதான் சோதிப்புகள் ஒன்றா, இரண்டா? கஷ்ட நஷ்டங்கள் கொஞ்சமா, நஞ்சமா? இந்த லட்சணத் தில் அவள் வரதட்சணைக்கு எங்கே போவாள்?. அவன் எங்கேயும் போக மாட்டாள்; அவள் அவளுக்குக்குள்ளே தான் இருப்பாள் - அவள் மனம் அப்படி: தவம் அப்படி, வைராக்கியம் அப்படி! அவள் சிரித்தாள்; மனம் விட்டுச் சிரித்தாள்; வாய்விட்டுச் சிரித்தாள்!"ஓ மை குட்னெஸ்...' ஈரம் கசிந்தது! ஈரத்தின் கசிவிலே பெருமை இருந்தது; கசிவின் ஈரத்திலே பெருமிதமும் இருந்தது. சுவர் அலமாரியில் டைம்பீஸ்' வீரிட்டது. மணி ஐந்து. தலைவாசலில் வந்து நின்றாள் பார்வதி. மலர்த்தும் மலராத விடிகாலைப் பொழுதின் அமைதியான இயற்கை பின் எழிலை ரசிப்பதென்றால், அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும் மனத்திற்கு ஓர் ஆறுதல் கிடைப்பதும் வழக்கம். இப்படிப்பட்ட ரம்மியமான நேரத்திலேதான் அன்றைக்கு ஒரு நாள் அவள் செந்தில் என்கிற அந்தப் பணக்காரப் பிள்ளையை முதன் முதலிலே சந்தித்தாள்:- இந்தச் செந்தில் உண்மையிலேயே நல்ல பிள்ளைதானோ? -

11

11