பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதி விதியிடமா விடை கேட்கிறான்?... மகாலட்சுமித் தெரு இன்னமும்கூட வெகு நிதான மான அமைதி கொண்டு காட்சியளித்தது. இப்போது அவளுக்கு ஆபீஸ் நினைவு வந்து விட்டது. பரபரப்பு அடைந்தவளாக, வீட்டு அலுவல்களைக் கவ னிக்க இரண்டாம் கட்டில் அடியெடுத்து வைத்தாள். அதற்குள் : குழாயில் கார்ப்பரேஷன் தண்ணீர் கருணையே வடி வெடுத்துக் கசியத் தலைப்பட்டது. விஷமப் புன்னகையில் சுதாரித்துக் கொண்டாள் பார் வதி; அடுப்படிக்கு விரைந்து எவர்சில்வர் குடத்தைக்கழுவி எடுத்து வந்து குழாயடியில் வைத்தாள்: சுதந்திரமான சுகம் அவளை அணைத்தது. போட்டி இல்லாததொரு தனிச்சுகம். தியாகராயநகர்ப் பகுதியில், இப்படிப்பட்ட வசதி வாய்ப்புக்களுடன் தனிவீடு அமைந்த தென்பது அதிர்ஷ்டவசமான காரியம்தான். நாட்டிலே நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட புதிதில் கிடைத்த வாடகை வீடு அது. ஒரு காலத்தில் அப்பாவின் சமர்த்து கொடி கட்டிப் பறந்ததென்னவோ பொய் இல்லைதான்! குழாயை அடைத்தாள் நிரம்பி வழிந்த குடத்தை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தாள். கூடத்தில் இறக்கி வைத் தாள். சின்னத்தட்டை எடுத்து மூடினாள். அருகில் தம் ளரையும் வைத்தாள்:- சின்னப்பயலுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும், குடத்தை இங்கே வைத்தால்தான் அவ னுக்கு செளகரியமாக இருக்கும். இதுவும் பார்வதி செய்த ஏற்பாடுதான். இந்த குடத்திலே தண்ணீர் மட்டுந்தான் திரம்யிருந்ததா? . அது, கமலி பாசத்தோட வாங்கித் தந்த குடம் அல்லவா? ' ' . . . . . . .

12

12