பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி!' 'மாப்பிள்ளை யார்னு கேட்க வில்லையே பாரு?" *நீங்க...நீ சொன்னல்தானே?" 'மாப்பிள்ளை உனக்குத் தெரிஞ்சவர்தான்!' 'எனக்குத் தெரிஞ்சவரா? மாதங்கி, யாராம் அவர்? 'தெரிஞ்சவர் மாத்திரம் கிடையாது; ஒரு காலத்திலே உன்மேல் காதல் வசப்பட்டிருந்தவரும் கூட!-அவர் உன்னை உசுருக்கு உசிராவே காதலிச்சார்; அது சாமான்யப் பட்ட காதல் இல்லே!-முதல் காதலாக்கும்! சரி; அந்த ஆளோட பேரைச் சொல் பார்க்கலாம்!' "நான் அறியாமலே என்ன நேகிச்ச ஒருத்தரோட பேரை என்னலே எப்படிச் சொல்ல முடியும், மாது?’ மனிதாபி மானத்தின் இரக்கம் அவள் குரளில் பேசியது. - 'ஒஹோ! சரி; நானே சொல்விட்றேன்..!அவர். அவர்தான் செந்தில்...ஆமாம்; மிஸ்டர் செந்தில் நாதன் அவர்!-அவர் எனக்கு முறை மாப்பிள்ளை வேறே; சொந்த அத்தை மகன்! என்னை மாதிரி, அவரும் மேட்டுக்குடிப் புள்ளிதான்! அவருக்கும் சேலம்தான் சொந்த ஊர்!’ பெருந்தன்மையோடு சிரித்தாள் மாதங்கி, இப்போது, அதிர்ச்சியோடு வேதனையையும் அனுபவிக்க தேர்ந்தது. இதயத்தில் தாரா நிழலாடுகிருள்; கூடவே செந்திலின் அழகான முகமும் நிழற்படம் காட்டியது சில நாட்களுக்கு முன் இதே பூங்காவில் தாரா தன்னுடைய காதலின் சிக்கலைப் பற்றிச் சொல்லித் தன்னிடம் ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டு. மென்று கோரிஞள். இப்போது மாதங்கி...பார் வதிக்கு தாரா-செந்தில் சம்பந்தப்பட்ட காதல் சிக்கவில்: அநாவசியமாகச் சிக்கிக் கொள்ள இஷ்டமில்லை. வெளிப் படையாக மறுத்து விட்டாள். அந்நேரத்தில் தான்.

74

74