பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதி பி. ஏ, பக்கத்துக்குப் பக்கம் இலக்கிய விருத்த படைத்தாள். ஒரு நாடகம்... 'உங்களைத் தானே! பாருக் குட்டிக்கு நாம சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டோம்ன, நாம ரெண்டு பேரும் சீக்கிரமா உடம்பு தேறி, எப்பவும் போல புதுத் தெம்போட நடமாடத் தொடங்கிடலாமுங்க!" என்று அம்மாக்காரி நயமாகப் பிரசினையை முன்மொழிய, "நீ சொல்றது சரியான நியாயந்தான்; தாள தசை கூடி வந்தாச் சின்னா நம்ம அருமைப் பாருக்குட்டியோட கல்யாணம் காட்சியும் பெருமையோடே கைகூடி நடந்திடும். நம்ம பொண்ணே மாலையும் கழுத்துமாகப் பார்த்தால்தான், உண்மையிலேயே நீயும் நானும் தெய்வச் சாட்சியாகவும் கொடுத்து வச்சவங்களாகவும் ஆவோம்! என்று பிரச்னைக்கு ஆதரவாக அப்பன்காரர் வழிமொழிய, கடந்த சிலபல நாட்களாகவே உச்சக்கட்டக் காட்சியாக நடந்து வரும் போர்வதி கல்யாணம் நாடகம் விடிகாலையிலே கூட நடந்தது!. கோடை வானம், சொல்லாமல் கொள்ளாமல் மட்பும் மந்தாரமுமாக ஆயிற்று. வெட்டிப் பாய்ந்த கொடி மின்னல், அக்கணத்தில்’ குமாரி பார்வதியின் இளைய மனத்தையும், முதிர்ந்த மனச் சாட்சியையும் சுற்றி வளைத்துக் கீறிப் பாயவே. அவள் பிரமை தட்டி எழுந்தாள்!- ஒரு சங்கதி எனக்கு இப்ப நல்லாவே புரிஞ்சிடுச்சு: அம்மாவுக்கும் சரி, அப்பா வுக்கும் சரி. இப்போதுள்ள தலைவலிப் பிரச்னையே, ஊகூம். நெஞ் சுவலிப் பிரச்னையே நான்தான்!...இந்த அளவுக்கு தான் பாவி ஆகிட்டேன்; பாவியிலேயும் பாவி, கொடும் பாவி ஆகிப்பிட்டேன். இப்படிப்பட்ட பழிபாவத்தை நான் இந்த ஜென்மத்திலேயே எப்படித்தான் தீர்த்து வச்சு:

84

84