பக்கம்:கன்னித் தமிழ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 131

இவ்வளவுதான்’ என்று அறுதியிடும் நினைவு யாருக்கும் வரக்கூடாது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் இவர் சொல்கிருரே. இவருக்கு இன்னது தெரியும், இன்னது தெரியாது என்ற வரையறையே இல்லைபோலும்! என்று மக்கள் வியக்கும்படி ஆசிரியர் இருந்தால் அவரை மலையென்றும் சொல்லலாம்; கற்பகமென்றும் சொல்லலாம்.

மலைக்கு அசலம் என்பது வடமொழியில் வழங்கும் பெயர்களில் ஒன்று. ‘அசையாதது’ என்பது அதன் பொருள். வாத்தியார் சுக துக்கங்களுக்கும், ஐயந்திரி புகளுக்கும் எதிர் நின்று அசையாமல் இருக்க வேண்டும். கல்வியென்பது உலகத்தில் பணம் படைக் கவும், புகழ் படைக்கவும் மாத்திரம் ஏற்பட்டதன்று. உயிருக்கு உறுதி பயக்கும் முயற்சியில் தலைப்படவும், இறைவனை உணரவும், இறுதியில்லாத இன்ப வீட்டை அடையவும் அது சாதனமாக உதவுவது. ஆகவே, கல்வியென்பது ஒரு வகையான சாதனை. மனத்தைப் பண்படுத்தும் சாதன்ை என்றே சொல்லவேண்டும். வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’ என்று ஒளவைப் பாட்டி சொல்கிருள். அந்தப் பழக்கம் முறுக முறுக மனிதனுக்குத் தெளிவும் திருப்தியும் உண்டாகும். நெஞ்சார நல்ல நெறியில் நடக்கும் திறமை ஏற்படும். ‘நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமை யால், கல்வி அழகே அழகு” என்று நாலடியாரில் வரு கிறது. கல்வியினல் உள்ளத்தைப் பண்படுத்தியவன் பிறருடைய மதிப்பினுல்தான் நல்லவனென்ற பெயரை அடையவேண்டும் என்பது இல்லை. அவனே தன்னை நடு-நிலையில் நின்று சோதித்துக் கொள்வான். அவனுடைய பயிற்சி மிகுதியாக ஆக, நாம் நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/139&oldid=612776" இலிருந்து மீள்விக்கப்பட்டது