பக்கம்:கன்னித் தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 135

இதமான வார்த்தைகளைச் சொல்பவர்; மென்மையான இயல்புடையவர். ‘மலர் மங்கலமானது; நல்ல காரியங் களுக்கு இன்றியமையாதது; யாவரும் மகிழ்ந்து கொள் வதற்குரியது; மெல்லியது’ என்று புகழ்கிருேம். அந்தப் புகழை அப்படியே வாத்தியார் ஐயாவுக்கும் சொல்லும் படி அவர் இருக்க வேண்டுமாம்.

மலருக்குப் போது என்று ஒரு பெயர் உண்டு. தக்க பொழுதில் தவருமல் மலர்வதனுல் அதற்கு அப் பெயர் வந்ததாம். இயற்கையிலே அமைந்த கடிகாரம் அது. ஆசிரியர் அதைப்போலக் காலந் தவருமல் மாளுக்கர்களுக்கு முகமலர்ச்சியோடு பாடம் சொல்லித் தரவேண்டும். காலக் கணக்கைக் கவனிப்பதில்லை என்ற குறைபாடு நம்மவர்களுக்கு இருப்பது உலகம் அறிந்தது. வாத்தியார் ஐயா அந்த அபவாதத்துக்கு உட்படக்கூடாது. பொழுதறிந்து கடமையைப் புரியும் இயல்பு அவரிடம் இருக்கவேண்டும்.

மங்கலம் ஆகி இன்றியமை யாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெஸ்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே என்று மலரின் இயல்பைச் சொல்லும் வாயிலாக வாத்தியார் ஐயாவின் இயல்பையும் குறிப்பாக இலக்கண ஆசியார்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு உபமானங்களால் உபாத்தியாய ருடைய தகுதியை அளவிட்டு விட்டு, உலகியல் அறிவும் இவைபோன்ற வேறு சிறந்த குணங்களும் உடையவன் ஆசிரியன்’ என்று தமிழிலக்கணக்காரர் சொல்லுகிறார், எவ்வளவுதான் படித்தாலும், நல்ல குணம் உடையவராக இருந்தாலும், உலகம் தெரியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/143&oldid=612792" இலிருந்து மீள்விக்கப்பட்டது