கப்பலோட்டிய தமிழன்
107
வந்தே மாதரம்' என்று உச்சரிக்கவும் பயந்த காலத் தில், ஆங்கிலக் கலெக்டர் விஞ்சின் முகத்தெதிரே "வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வா ாழ்த்து வேன் என்று அஞ்சாது கூறினார். பாமர மக்கள் காங்கிரஸில் புகாத அந்நாளில் - ஆங்கிலத்தில் பேசு வதே பெருமை, தமிழில் பேசுவது சிறுமை என்று எண்ணிய காலத்தில்- பாமர மக்களைக் கூட்டி வைத் துப் பசுந் தமிழில் பேசிச் சுதந்தரப் போருக்குத் தமிழர்களைத் தட்டி யெழுப்பிய பெருமை சிதம்பரனா ரின் தனியுரிமை,
வீரச் சிதம்பரனாரை அந்த நாளில் வட நாட்டார் அறிந்து கொண்ட அளவு தமிழ் நாட்டார் தெரிந்து கொள்ளவில்லை எனத் துணிந்து கூறலாம். இதற்குச் சான்றாக சில சம்பவங்களை இங்கு எடுத்துக் கூறு
வோம்:
சூரத் காங்கிரஸின்போது பிரதிநிதிகள் விடுதியில் மகான் அரவிந்தர், லாலா லஜபதி போன்ற தீவிர வாதத் தலைவர்களும், வேறு பல பிரதிநிதிகளும் உட் கார்ந்திருந்தனர். அச்சமயத்தில், அரவிந்தர் அங்கிருந் தவர்களை நோக்கி " Where is my pillai ?' (என் பிள்ளையவர்கள் எங்கே?) என்று கேட்டார். யாவரும் சற்றுத் திகைத்திருந்தனர். உடனே அரவிந்தர் விளக்கமாக "அவர்தான், புகழ் பெற்ற தேச பக்தர் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை" என்றார். எல்லோ ருக்கும் இவ்வார்த்தைகள் தூக்கி வாரிப் போட்ட தைப் போலிருந்தன. பிள்ளையவர்களும் அங்கு வந்து