உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் வீரமும் தமிழினத்தின் இரு கண்கள் போன்றவை. பண்டைத் தமிழ் நூல்களை ஆராய் வோர், அகம் புறம் என்ற இரு சொற்களில் இந்த உண்மை விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தமி ழினத்தின் வீரத்திற்குச் சான்று கூறிய வள்ளுவப் பெரியாரும்,

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா னன்ன உயிர்நீப்பர் மானம் வரின்

.

என்றார். ஆம்; மானம் இழந்தபின் உயிர் வாழ்வது தமிழர் மரபன்று.

வீர வழிபாடே இறை வழிபாடாகக் கொண்ட வர் தமிழர். இறை வழிபாட்டின் உண்மையும் அதுவேயாம். 'கடவுள் வழிபாடு' என்பதன் மூலத் தை ஆராயப் புகுந்தால், அது வீர வழிபாட்டில் துவங்கியதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

"மானங் காத்தான்', 'கானாடு காத்தான்' என்பன போன்ற இன்றையத் தமிழகத்தின் ஊர்ப் பெயர்களும், பண்டைய வீரர்களின் விழுமிய செயல் களை பிற்கால மக்கள் மறவாமல் போற்றின ரென் பதை நினைவூட்டுகின்றன வன்றோ?

சிலப்பதிகாரத்தில், அறக் கற்பினளான பாண்டி மாதேவி இருக்க, மறக் கற்பினளான கண்ண