உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பலோட்டிய தமிழன்

55







புறப்படுத்தவோ, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்விக்கவோ அதிகாரிகள் அக்கரை கொள்ளாது வீதியிலேயே விட்டுச் சென்றனர்: மாலைவரை பிரே தங்கள் வீதியிலேயே கிடந்த பின்னர் அவற்றின் உற வினர்கள் வந்து எடுத்துச் சென்றனர்.

கலகக்காரர்கள் கற்களால் அடித்ததால் இன்ஸ்பெக் டருக்கு மண்டை உடைந்தது; கலெக்ட ருக்கும் சொற்ப காயம். குழப்பம் மூன்று நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. இதே சமயத்தில் தூத்துக்குடியிலும், தச்சநல்லூரிலும் கடையடைப் பும் குழப்பமும் நிகழ்ந்தன. தச்சநல்லூரில் யூனியன் ஆபீஸ் கொளுத்தப்பட்டது. சாதாரண போலீசா ரால் அமைதி நிலவச் செய்வது அசாத்தியம் என் று. உணர்ந்து, சென்னை சர்க்கார் தண்டப் போலீஸ் படை யைத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய வீடங்களுக்கு அனுப்பி வைத்து, அப்படையி னருக்காகுஞ் செலவைப் பொதுமக்களிடமே வசூல் செய்யப்படுமென அறிவித்தனர். திருநெல்வேலி ஜில் லாவிலுள்ள வெள்ளையர்கள் வீடுகளிலெல்லாம் ராணு வத்தினர் காவல் புரிந்தனர்.

கனம் குருசாமி ஐயரும், மற்றும் இரு பிரமுகர்களும் சென்னைக்கு வந்து, தண்டப் போலீசை அகற்ற வேண் டுமென கவர்னரை வேண்டினர். ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் குழப்பத்தை அடக்கப் போலீசாருக்குத் தக்க சமயத்தில் உதவி புரியாததால், தண்டப் போலீ சை அனுப்ப நேரிட்ட தென்றும், மீண்டும் அமைதி நிலவும்வரை திருப்பி அழைக்க முடியாதென் றும் கவர்னர் கூறினார். பிரமுகர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.

இந்தக் குழப்பத்தில் சம்மந்தப்பட்டதாகக் கூறி தச்சநல்லூர், திருநெல்வேலி, தூத்துக்குடி முதலிய